Tuesday 23rd of April 2024 09:47:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசிரியை, தாதி, கைதி உட்பட்ட ஆறு பேருக்கு குடாநாட்டில் கொரோனாத் தொற்று!

ஆசிரியை, தாதி, கைதி உட்பட்ட ஆறு பேருக்கு குடாநாட்டில் கொரோனாத் தொற்று!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனாத் தொற்றாளர்கள் ஆறு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்.சிறைச்சாலை கைதி, மற்றையர் மல்லாவியில் நடைபெற்ற மரணச் சடங்குக்கு சென்றுதிரும்பியர், இன்னொருவர் கொழும்பிலிருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்.

அதேவேளை சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் வசிக்கும் ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை ஏற்கனவே சண்டிலிப்பாயில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியையுடன் தொடர்பிலிருந்தவர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட தாதியர்களுடன் தொடர்பிலிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

இன்னொருவர் 79 வயதுடைய மூதாட்டி, சிகிச்சைக்காக வந்த நிலையில் நோய் அறிகுறி காணப்பட்டமையால் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE