கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் கொரோனாத் தொற்றினாலேயே உயிரிழந்ததாக முடிவாகியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மத்திய சுகாதார திணைக்களத்தினருடன் கலந்தாலோசித்து குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து யாழ்ப்பாணம் கோம்பையன்மணல் மயானத்தில் சடலத்தை மின் தகனம் செய்ய தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்