முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பாலத்தில் இன்று மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
நாயாற்றுப் பாலத்தில் மழையின் காரணமாக சறுக்கல் நிலை காணப்பட்டது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. இதன்போது இதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிறுகாயங்களுக்க உள்ளான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்குளாய் பகுதியினை சேர்ந்த குறித்த வகனம் முல்லைத்தீவு நோக்கி பயணித்த போது வேக கட்டுப்பாட்டினை இழந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு