Wednesday 24th of April 2024 12:44:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை!

கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை!


கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அல்- குர்ஆன் பாராயணம் விசேட பிரார்த்தனை ஐம்பது வறிய குடும்பங்களுக்கு உலவுப்பொதிகள் வழங்கள் மற்றும் கொவிட் தொற்றினால் மரணிக்கும் உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு மட்டக்களப்பு சூடுபத்தினசேனை பிரதேசத்தில் காணியை வழங்கியுள்ள ஓட்டமாவடியைச் சேர்ந்த முகம்மது ஜௌபர் என்பவரைப் பாராட்டி கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.

'நமக்காக நாம்" என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இந்த வைபவம் முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் முகமட் பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது.

மௌலவி எம்ஐ. நாஸர் விசேட பிரசங்கம் நிகழ்த்தினார். மௌலவி அமீன் பிரார்த்தனை நடாத்தினார்.

இதையடுத்து வாழ்வாதாரம் குறைந்த ஐம்பது குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

காணி நன்கொடையாளர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE