இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தமிழர்களின் நீதிக்கான கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்தில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சென்னை - நுங்கம்பாக்கத்திலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைக்கான இளையோர் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் இந்த மனு கையளிக்கப்பட்டது.
பிரித்தானிய அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் சாகும் வரையிலான தனது உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர் அம்பிகை செல்வகுமாரின் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 16-ஆவது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்திலும் ஆதரவு வலுவடைந்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அம்பிகை செல்வகுமார் போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, சென்னை