Thursday 18th of April 2024 11:51:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு  பிரிட்டிஷ் எம்.பி. ஆதரவு!

அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு பிரிட்டிஷ் எம்.பி. ஆதரவு!


பிரிட்டனில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம் பணிப்புரை விடுத்துள்ளது.

பிரிட்டனின் உள்துறை செயலாளர் பிரிட்டி பட்டேலுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டு பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' 2018 ஆம் ஆண்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அந்தக் கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, 'தடையை நீடிப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை' என்று மனுதாரர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது.

குறித்த மனுவை விசாரணை செய்த தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையம், ‘பிரிட்டன் அரசின் தீர்மானத்தில் தவறு இருக்கின்றது' என கடந்த ஒக்டோபர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், தடையைப் புதுப்பிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ள மேன்முறையீட்டு ஆணையம், உள்துறை செயலாளர் தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேநேரம், தாம் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், மேன்முறையீட்டாளர்களின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE