சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 3:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமான நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காது ஹசரங்க டீ சில்வா 80, பண்டார 55 ஓட்டங்களையும், குணதிலக 36 ஓட்டங்களையும், கருணாரத்ன 31 ஓட்டஙகளையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
275 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெரன் பிராவோ சிறப்பாக விளையாடி 102 ஓட்டங்களைப் பெற்று சதமடித்து அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருந்தார்.
இதேவேளை பொலார்ட் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது இருந்த நிலையில் சாய் ஹோப் 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
போட்டியின் நாயகனாக டெரன் பிராவோவும், தொடர் நாயகனாக சாய் ஹோப்பும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை