வீதிப் பாதுகாப்பு நலநிதிய உலக ரீ-20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய ஜாம்பவானகள் அணிகள் இன்று மாலை பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க ஜாம்பவானகள் அணியை வாரிச் சுறுட்டி வாகை சூடிய இலங்கை ஜாம்பவான்கள் அணி இறுதிப் போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணியை இன்று மாலை எதிர்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை ஜாம்பவான்கள் அணி சார்பில் நுவான் குலசேகர 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஜாம்பவான்கள் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை ஜாம்பவான்கள் அணி சார்பில் உபுல் தரங்க ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் சிந்தக்க ஜெயசிங்க 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய இறுதிப்போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் அணியும் இலங்கை ஜாம்பவான்கள் அணியும் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இப் போட்டி இன்று மாலை இலங்கை நேரம் 07.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை