வவுனியா குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாமையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடங்கிய குழாம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
வவுனியா குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாமையத்தில் நகரசபையின் அனுமதியின்றி சில கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்புகளும் விசனம் தெரிவித்துவருகின்றனர். குறித்த கட்டங்களை அகற்றுவதற்கு நகரசபையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் ஒப்பந்ததாரருக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, வட மாகாணம், வவுனியா