கிளிநொச்சி ஏ-35 வீதியில் டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்து டிப்பர் வாகனமே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வாகன சாரதி காயமடைந்த நிலையில் தர்மபுரம்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி