Tuesday 16th of April 2024 04:03:18 PM GMT

LANGUAGE - TAMIL
.
மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!

மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!


சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை தடைசெய்ய வலியுறுத்தியும், எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களது பிரச்சினைக்கு தீர்வுகான வலியுறுத்தியும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மீனவர்கள் தமது தொழில் வளங்கள் பாதிக்கும் சட்டவிரோத மீன்பிடி சுருக்குவலை, வெளி மாவட்ட மீனவர்களின் அத்துமீறல், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுதல் இவற்றினால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களது வாழ்வாதார பாதிப்புக்கள் தொடர்பில் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து, இன்று காலை 07.00 மணி முதல் அரச உத்தியோகத்தரது பேருந்தை மறித்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE