முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வவுனியாவில் உள்ள கிருஸ்தவ தேவலாயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தும் வகையில் இராணுவப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின ஆரதானையின் போது இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலினால் பல பொதுமக்கள் உயிர் இழந்தனர். இதன் காரணமாக தற்போது நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் உயிர்த்தஞாயிறு நிகழ்வுகள் வருகின்ற 4ம் திகதி உள்ள தேவாலயங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை பூராவும் உள்ள அனைத்து தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா