கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவா் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மருத்துவ ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையான நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தனது ருவிட்டரில் சச்சின் தெரிவித்துள்ளார்.
அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். கவனமாக இருங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் சச்சின் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.