தாய்வானில் சுரங்கப் பாதைக்குள் ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.
உடனடியாக 32 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டபோதும் சுரங்கத்துக்குள் சிக்கிய ரயில் பெட்டிகளில் இருந்து மேலும் பலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
8 பெட்டிகளைக் கொண்ட ரயிலின் பல பெட்டிகள் மோசமாகச் சேதமடைந்த நிலையில் அவற்றுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர்.
தலைநகர் தைபேயில் இருந்து டைட்டங் என்ற நகரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோத, ஹுவாலியன் என்ற பகுதியில் ரயில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமான ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த பல பத்தாண்டுகளில் தாய்வானில் நடந்திருக்கும் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தாய்வான் ட்சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு விபத்தின்போது ரயிலின் பின் பகுதி பெட்டியில் இருந்த பலர் காயம் ஏதுமின்றி ரயிலில் இருந்து வெளியேறி விட்டனர்.
முதல் நான்கு பெட்டிகளில் இருந்து சுமார் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் பலரும் கட்டுமான வாகனத்தில் மோதி நசுங்கிப்போன முதல் 4 பெட்டிகளில் இருந்தவர்களாவர்.