உலகெங்கும் பல நாடுகளில் கொரோனா தொற்று நோயாளர் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் உலகில் மிக அதிக கொரோனா தொற்று நோயாளர்கள் நேற்று இந்தியாவில் பதிவாகியுள்ளனர். நேற்று இந்தியாவில் மொத்தம் 89,019 பேருக்கு தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் இந்தியாவில் பதிவான மிக அதிகளவான தொற்று நோயாளர் தொகை இதுவாகும். அத்துடன், இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,968 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று கொரோனாவுக்கு மேலும் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று பிரேசிலில் நேற்று 69,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அத்துடன், நேற்று 2,807 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
பிரான்சில் நேற்று 46,677பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதுடன், 304 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 21,932 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதுடன், 481 பேர் இறந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று புதிதாக 8,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 400 பேர் பலியாகியுள்ளனர்.
அதேபோன்று துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 42,308 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலககெங்கும் பல நாடுகளில் கொரோனா தொற்று நோயாளர் தொகை மீண்டும் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் உலகளவில் மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 13 கோடியே 8 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் 28 இலட்சத்து 50 ஆயிரத்து 923 பேர் இன்று காலை வரை உயிரிழந்துள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்