Thursday 28th of March 2024 07:10:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாத் தொற்றுக்குள்ளான கனிமொழியும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான கனிமொழியும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்!


திமுக பாராளுமன்ற உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கடந்த தினத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்றைய தினம் முழு கவச உடை அணிந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

கனிமொழிக்கு கடந்த 3ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 இற்கான வாக்கெடுப்பு இன்று ஒரே தடவையாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

இன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் ஆகியோருக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் முழு கவச உடையணிந்து வந்து கனிமொழி தனது வாக்கை பதிவு செய்து ஜனநாய கடமையாற்றினார்.

இதேபோல் அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் முழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE