Tuesday 16th of April 2024 06:11:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று: மும்பை கடற்கரைகள் அனைத்தும் 30ம் திகதிவரை மூடல்!

மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று: மும்பை கடற்கரைகள் அனைத்தும் 30ம் திகதிவரை மூடல்!


இந்தியாவில் கொரோனாத் தொற்று பரம்பல் மீண்டும் அதிகரித்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மும்பை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வரும் 30-ம் தேதி வரை மூடவேண்டும் என, மும்பை மாகராட்சி ஆணையாளர் இக்பால் சகால் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. பொலிசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு வந்தவர்களை பொலிசார் திருப்பி அனுப்பினர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE