காசோலை மோசடி வழக்கில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பிரபல தென்னிந்திய நடிகருமான சரத்குமார், அவருடைய மனைவியான பிரபல நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரேடியன்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட மனுத்தாக்கலின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தினால் குறித்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.