இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டாவது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
கடந்த மார்ச் - முதலாம் திகதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை மோடி போட்டுக்கொண்டார்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை இன்று காலை அவா் பெற்றுக்கொண்டார்.
இன்று இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட புகைப்படத்தை தனது ருவிட்டரில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர், கொரோனாவை வெல்லும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று என்பதால் தகுதியான அனைவரும் உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.