இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் , நேற்று மேலும் 685 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 29 இலட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று நோயுடன் 9 இலட்சத்து 10 ஆயிரத்து 319 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 1 கோடியே 18 இலட்சத்து 51 ஆயிரத்து 393 குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை 7 மணி வரையான தரவுகளில் பிரகாரம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 9 கோடியே 2 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 29 இலட்சத்து 79 ஆயிரத்து 292 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தொற்று நோய் பரவல் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா