பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுந்த சர்சையால் உழவியந்திரப் பெட்டிக்கு தீ மூட்டி, கோடரியால் கொத்தி சேதப்படுத்திய சம்பவம் தென்மராட்சியில் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாம் பொக்கட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கிடையேயான பணக் குடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த பழிவாங்கல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக் கொடிகாமம் பொலிஸ் அதிகாரி எதிர்வீரசிங்க தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் தீ மூட்டி நாசகார வேலையைச் செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், தென்மராட்சி