Thursday 18th of April 2024 08:43:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
கடல் வழியாக வெளிநாடு தப்பிச் செல்ல  முயன்ற 20 பேர் சிலாவத்துறையில் கைது!

கடல் வழியாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 20 பேர் சிலாவத்துறையில் கைது!


மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சோ்ந்த 17 பேர் உட்பட 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை - கொண்டாச்சிக்குடா சோதனைச் சாவடியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது கடந்த செவ்வாய்க்கிழமை இவா்கள் கைது செய்யப்பட்டனர்.

நான்கு முச்சக்கரவண்டிகளில் சென்றுகொண்டிருந்த இவா்களைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவா்களில் 14 ஆண்கள், 04 பெண்கள், 13 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அடங்குகின்றனர்.

கைதானவா்களில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த தலா நான்கு பேர் உள்ளனர். அத்துடன், வாழைச்சேனை, புத்தளம் மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் கைதாகினர்.

இவர்கள் பயணம் செய்த நான்கு முச்சக்கர வண்டிகளும் சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE