யாழ். போதனாவில் நால்வர் உள்ளிட்ட எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாத் தொற்று காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். போதானா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் (ஏப்-08) 352 பேருக்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு எண்மருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களது விபரம்...
யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதி - 04யாழ். சிறைச்சாலை - 03
கிளிநொச்சி - 01 (தொற்று அறிகுறியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற நபர்)
இதேவேளை, கோண்டாவில் மேற்கு, காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி