Tuesday 23rd of April 2024 01:46:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை மீனவர்கள் மூவரைக் காணவில்லை!

பருத்தித்துறை மீனவர்கள் மூவரைக் காணவில்லை!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான மீனவர்கள் மூவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஒரு படகில் 47 வயதுடைய இருவர் மற்றும் 43 வயதுடைய ஒருவர் ஆகியோர் நேற்று முன்தினம் கற்கோவளம் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர்.

நேற்று காலை 8மணியளவில் அவர்கள் கரை திரும்பியிருக்கவேண்டும் என்றபோதிலும் அவர்கள் கரை திரும்பாததை அடுத்து ஏனைய மீனவர்கள் பல படகுகளில் அவர்களைத் தேடிச் சென்றிருக்கின்றனர்.

நீண்ட நேரமாகித் தேடியும் தேடுதல் முயற்சி பலனளிக்காமையால் தேடிச் சென்றவர்கள் கரை திரும்பியிருக்கின்றனர்.

இந்நிலையில்,

மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ்நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE