மீன்பிடித் தொழில் நிமித்தம் கடலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த பருத்தித்துறை மீனவர்கள் மூவரும் சற்று முன்னதாக கரை திரும்பியுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான மீனவர்கள் மூவர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த குறித்த மீனவர்களை தேடும் பணியில் இரு குழுக்களாக ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு பத்திரமாக கரை திரும்பியள்ளனர்.
படகு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரை திரும்ப முடியாது நடுக்கடலில் தத்தளித்திருந்த மீனவர்களை தேடிச் சென்ற ஒரு குழுவினர் கண்டுபிடித்த நிலையில் அவர்களை மீட்டு பழுதடைந்த படகை கட்டி இழுத்து சற்று முன்னதாக கரைக்கு திரும்பியுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவருமே இவ்வாறு காணமால் போயிருந்த நிலையில் மீட்கப்பட்டு கரை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி