இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர மேயா் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே கருதப்படுகிறது என கனடா - பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
இது தவறான நடவடிக்கை எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் இலங்கை விடுவிக்க வேண்டும். தமிழ் இனப்படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட ஐ.நா.வுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் எனவும் பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் கோரியுள்ளார்.