Friday 29th of March 2024 03:54:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
கரைச்சி பிரதேச சபையினால் போதைகளுக்கு எதிரான வாரமாக பிரகடனப்படுத்த சபையில் தீர்மானம்!

கரைச்சி பிரதேச சபையினால் போதைகளுக்கு எதிரான வாரமாக பிரகடனப்படுத்த சபையில் தீர்மானம்!


தற்போது கிளிநொச்சியில் பாரிய பிரச்சினையாக இருக்கும் போதையை தடுக்கும் முகமாக போதைகளுக்கு எதிரான வாரமாக பிரகடனப்படுத்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபையினால் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் முன்வைத்தார்.

கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. பிரேரணையினைக் கொண்டு வந்து உரையாற்றிய தவிசாளர் கிளிநொச்சியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பது போதைப்பொருள் பாவனையே எனவும் இது தொடர்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும்.

இதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அவற்றில் இருந்து மீட்கும் செயற்பாடாகவும் இருக்க வேண்டும்.

பிரதேச சபையின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான செயலணிக்கு ஒரு தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் எனவும் காரணம் மக்கள் சட்டவிரோதமான போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் தொடர்பாக பொலீசாருக்கு அறிவிக்கும் போது அவ்விடயம் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு யாரால் முறைப்பாடு செய்யப்படுகிற விபரம் தெரிவிக்கப்படுவதால் பொலீசாருக்கு கூற அச்சப்படுவதால் அவர்கள் பிரதேச சபைக்கு தெரிவித்தால் பிரதேச சபை சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அறிவிக்க முடியும் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE