வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி சங்க கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் அ. லோகேஸ்வரன் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை எமது பாடசாலையில் நடைபெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டம் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கபட்ட காரணத்தாலும் எமது பாடசாலை ஆசிரியை திருமதி சுதர்சினியின் தந்தையாரும் ஆசிரியராகவும் அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளாருமான உள்ள கோகுலதாஸின் மாமனாரும் மரணமடைந்துள்ளமையாலும் வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனையுடன் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
விடுமுறையின் பின்னர் பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் அதிபர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா