Friday 29th of March 2024 09:42:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
பாக்கு நீரிணையை இருவழியில் நீந்திக் கடந்து இரண்டாவது இலங்கையர் சாதனை! (ஒளிப்படங்கள்)

பாக்கு நீரிணையை இருவழியில் நீந்திக் கடந்து இரண்டாவது இலங்கையர் சாதனை! (ஒளிப்படங்கள்)


தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நீந்தித் திரும்பிய இரண்டாவது நபர் என்ற சாதனையை இலங்கை விமானப்படையின் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார்.

59.300 கி.மீ. தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 58 விநாடிகள் நீந்திக் கடந்து அவா் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 32 வயதான நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் ஆரம்பித்தார்.

தனுஷ்கோடியைச் சென்றடைந்த அவர், பின்னர் அங்கிருந்து நீந்தியவாறு இன்று காலை தலைமன்னாரை வந்தடைந்தார்.

ரோஷன் அபேசுந்தர இலங்கையில் பல்வேறு சாகச கடல்- நீச்சல் பயணங்களில் வெற்றிகரமாக பங்கேற்றவராவார்.

இன்றுவரை 14 நீச்சல் வீரர்கள் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்துள்ளனர். ஆனால் தலைமன்னாரில் இருந்து நீந்திச் சென்று நீந்தித் திரும்பிய சாதனையை இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆழிக்குமரன் ஆனந்தன் என அழைக்கப்படும் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் படைத்துள்ளார்.

1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி வந்து அவா் இந்தச் சாதனையை படைத்தார். இந்தச் சாதனையைப் படைக்க அவா் அப்போது முடிக்க 51 மணித்தியாலங்களை எடுத்துக் கொண்டார்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE