எஸ்.எச். புர்ஹானுதீன் எழுதிய “வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திக்கான எல்லை நிர்ணயம் மற்றும் புதிய கிராமசேவகர் பிரிவுகளை உருவாக்குவதற்கான முன்மொழிவு” செய்யப்பட்ட புத்தக வெளீட்டு விழா வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
மௌலவி யூ.எல்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் கலந்து கொண்டதுடன் நுல் விமர்சனத்தை கவிஞர் யூ.எல்.எம்.ஹரீஸ் நடாத்தியதுடன் நூலின் ஆய்வினை நூலாசியர் எஸ்.எச். புர்ஹானுதீன் நடாத்தியதுடன் நன்றி உரையினை ஹாபீஸ் என்.எம்.எம்.சியாம் நடாத்தினார்.
வாழைச்சேனை மெஸ்ரோ அமைப்பின் வெளியீடாக வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் பள்ளிவாசல் நிருவாகிகள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு