ஆலயங்களிலும் பொது இடங்களிலும் ஒன்றுகூடுவதை தவிர்த்து புதுவருட நிகழ்வுகளை அமைதியான முறையில் கொண்டாடுமாறு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவருடத்தினை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
புத்தாண்டில் அதிக அபிவிருத்தியை செய்யக்கூடிய வலுகிடைக்க வேண்டும் என்பதுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு