மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை கடும் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன் தொடர்சியாக மழை பெய்வதற்குரிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இன்று காலை பெய்த மழை காரணமாக மன்னார் தீவு பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் சில வீதிகளிலும் நீர் தேங்கி காணப்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்