யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் சிறப்பு அதிரடிப்படையினர் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலதிக விபரங்கள் விரைவில் இற்றைப்படுத்தப்படும்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்