தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்படங்களில் தீவிரமாக நடித்துவந்த நிலையிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினமே நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனாவிலிருந்து நமது உயிரை காத்துக் கொள்ள முடியும் என்றார்.தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.