யாழ்ப்பாணத்தில் இன்று 588 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பொலிஸார் இருவர் உட்பட்ட 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். (இருவர் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்)
சண்டிலிப்பாயில் இருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்)
தெல்லிப்பளையில் ஒருவர் (வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்)
யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் ஒருவர் (பொலிஸ் உத்தியோகத்தர்)
தகவல் - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம், யாழ்ப்பாணம்