திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் தனது வீட்டில் இன்று காலை வழமைபோன்று குடும்பத்தினருடன் கதைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார்.
இதையடுத்து சென்i, வட பழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினால் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“சுயநினைவு இல்லாத நிலையில் குடும்பத்தினரால் நடிகர் விவேக் இன்று காலை 11 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வல்லுனர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
தற்போதைக்கு அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளது. உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல இது மாரடைப்பால் ஏற்பட்ட பிரச்னை’ என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.