Saturday 20th of April 2024 07:24:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
உச்சம் பெறும் கொரோனா: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,449 பேருக்கு தொற்றுறுதி!

உச்சம் பெறும் கொரோனா: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,449 பேருக்கு தொற்றுறுதி!


தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று தலைவிரித்தாடும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஏப்-16) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 449 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 71 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE