Wednesday 24th of April 2024 11:22:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். குடாவில் அதிகரிக்கும் கொரோனா பலியெடுப்பு!

யாழ். குடாவில் அதிகரிக்கும் கொரோனா பலியெடுப்பு!


யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை அண்மைய நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இத்தகவலை வழங்கியிருந்தார்.

அதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நேற்று (நேற்று முன்தினம்) யாழ். தென்மராட்சி சாவகச்சேரி கல்வயல் கிராமத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர், முல்லேரியா தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மரணமானது கோவிட்-19 காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட 14ஆவது மரணமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தில் 21 ஆவது கோவிட்-19 இறப்பாகவும் பதிவாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE