யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்று பரம்பல் ஓயாத அலையாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த 16 நாட்களில் 522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இத்தகவலை வழங்கியிருந்தார்.
அதன்போது மேலும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாதத்தில் முதல் 15 நாட்கள் வரை யாழ். மாவட்டத்தில் 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன்,
வவுனியா மாவட்டத்தில் - 11
கிளிநொச்சி மாவட்டத்தில் - 04
மன்னார் மாவட்டத்தில் - 03
முல்லைத்தீவு மாவட்டத்தில் - 02 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மேலும் கூறியிருந்தார்.
இதேவேளை, நேற்று ஏப்-16 மாலை, யாழ். குடாநாட்டில் மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 16 நாட்களில் மட்டும் யாழ். கடாநாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 522 ஆகவும், வடமாகாணத் தொற்று 542 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்