திடிர் உடல்நலக் குநைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்பட் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நடிகர் விவேக் உயிரிழந்திருந்தார்.
அவரது உடல் தற்போது சென்னை , விரும்கம்பாக்கத்தில் உள்ள அவரது இலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை காதாபாத்திரன் ஊடாக சமூதாய சீர்திருத்த கருத்துகளை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்த விவேக் மறைந்த செய்தி வெளியானது முதல் பலதரப்பினர் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலகத் தமிழர்கள் என பரந்துபட்ட அளவில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை நடிகர் விவேக்கின் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இன்று காலை முதலே விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக கூடிவருகின்றனர்.
இதையடுத்து சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர், இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று மாலையே தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.