உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 30 இலட்சத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.
அத்துடன், உலகில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் 14 கோடியைக் கடந்துள்ளது.
இன்று சனிக்கிழமை வரையான தரவுகளின் பிரகாரம் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்து 11 ஆயிரத்து 649-ஆக அதிகரித்துள்ளது.
உலகெங்கும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 5 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 11 கோடியே 93 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
1 கோடியே 81 இலட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்று நோயுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1 இலட்சத்து 7 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்