Thursday 25th of April 2024 11:16:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு!


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளில் புகைவிசிறும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் புகைவிசிறும் செயற்பாடுகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் டெங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையிலும் வாராந்தம் 10பேர் வரையில் இனங்காணப்பட்டு வருவதாகவும் அவற்றினையும் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதன் தெரிவித்தார்.

இதேநேரம் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக சுற்றாடலில் நீர் தேங்கும் இடங்களை தூய்மைப்படுத்துமாறும் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பொருட்களை சுற்றாடலிலிருந்து அகற்றுமாறும் சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE