Friday 29th of March 2024 07:16:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா-ஓமந்தை: கடமையில் இருந்த இராணுவத்தினரை மோதித்தள்ளிய கடத்தல் வாகனமும் விபத்திற்குள்ளாகியது!

வவுனியா-ஓமந்தை: கடமையில் இருந்த இராணுவத்தினரை மோதித்தள்ளிய கடத்தல் வாகனமும் விபத்திற்குள்ளாகியது!


வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்...

எ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற வாகனத்தினை ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.

இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்து சென்றுள்ளார்.

அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE