யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தைத் தொகுதி வியாபாரிகளுக்கு இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை, உடுவில் வைத்திய அதிகாரி பிரிவு ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் (தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்)
மன்னாரில் ஒருவருக்குத் தொற்று என வடக்கில் இன்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்