இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் இன்று இரவு சென்னை அப்பலோ மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அடைப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.