Tuesday 23rd of April 2024 02:28:30 PM GMT

LANGUAGE - TAMIL
.
காட்டு யானை தாக்குதல்: வவுனியாவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

காட்டு யானை தாக்குதல்: வவுனியாவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!


காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை காப்பாச்சி பகுதியில் உள்ள வயல்காணிக்கு குறித்த நபர் காவலுக்கு சென்றுள்ளார்.

இன்றைய தினம் வீடு திரும்பாத நிலையில் வயற் பகுதிக்கு சென்ற சிலர் அவர் சடலமாக இருப்பதனை அவதானித்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தில் சின்னசிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நலீம் வயது-43 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.

குறித்த நபர் காட்டுயானை தாக்கியமையால் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE