ஈஸ்டர் தின நாளில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட மக்களுக்காக ஏப்-21 இல் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 8.45 முதல் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் கத்தோலிக்க சபைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.