Wednesday 24th of April 2024 02:16:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டமும் இலக்கு வைக்கப்பட்டதன் காரணமாகவும் நாளை குறித்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படும் நிலையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இதேபோன்று இராணுவத்தினரும் விசேட ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE