Friday 29th of March 2024 10:19:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
அனைத்து மே தின நிகழ்வுகள், பேரணிகள்  இம்முறை இரத்து - இராணுவத் தளபதி!

அனைத்து மே தின நிகழ்வுகள், பேரணிகள் இம்முறை இரத்து - இராணுவத் தளபதி!


இலங்கையில் இம்முறை மே தினத்தை ஒட்டி இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் பேரணிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணி தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறினார்.

இலங்கையில் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தார்.

முன்னதாக இன்று இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். தமது பேரணி கொழும்பில் நடைபெறும் எனவும் அவா் கூறினார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி மே தின நிகழ்வுகள் தொடர்பில் ஆராய்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE