Saturday 20th of April 2024 06:11:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
நல்லூர் MOH இல் ஐவர் உட்பட யாழ். குடாவில் 07 பேருக்கு தொற்றுறுதி! 15 பேரின் தகவல் வெளியானது!

நல்லூர் MOH இல் ஐவர் உட்பட யாழ். குடாவில் 07 பேருக்கு தொற்றுறுதி! 15 பேரின் தகவல் வெளியானது!


நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் ஐவர் உட்பட யாழ். குடாநாட்டில் மேலும் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத் தரப்பில் இருந்து அருவிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் இன்று (ஏப்-20) வடமாகாணத்தில் 643 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவ்வாறு 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 417 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த 15 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அருவிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதேவெளை யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடத்தில் இன்றைய தினம் 226 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டம் - 07 (நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் - 05 பேர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவில் - 02 பேர்)

வவுனியா மாவட்டம் - 07 (பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்)

கிளிநொச்சி மாவட்டம் - 01 (பாரதிபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்)


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நல்லூர், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE